world

img

2023ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிக்கோவுக்கும், ட்ரூ வெய்ஸ்மனுக்கும் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி,  ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரென்க் க்ராஸ்ஸ் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரான் இயக்கவியல் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒளியின் ஆட்டோ செகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.